கோலாலம்பூர் ஏப்ரல்-19
மிண்டாஸ் என்ப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கம் பார்க்காத அமைச்சர்கள் இல்லை, போகாத கூட்டம் இல்லை. ஆனால் எங்களுக்கு எந்த விடிவும் இதுவரை இல்லை என அச்சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் மிக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ராஜசேகரன் பேசுகையில் முன்பு அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் இருந்தார்கள். எங்கள் பிரச்ச்சினைகளை அவர்கள் அமைச்சரவையில் பேசுவார்கள் ஆனால் இன்றோ அமைச்சரவையில் ஒருவர் கூட இல்லை எங்களுக்காக பேச என்றார் !
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் எங்களுக்கு 7500 அந்நியத் தொழிலாளர் அனுமதியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் நடைமுறையில் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.
இப்போது இருக்கும் துணை அமைச்சர்கள் எல்லாம் எங்களை கண்டுகொள்வதே இல்லை. எதோ protocol வாயிலாக வாருங்கள் என்கிறார்கள் என ராஜசேகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் எங்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் பேச வேண்டும் . எங்கள் பிரச்சினைக்கு அறிவிப்பு மட்டும் தான் உண்டு, ஆனால் தீர்வு இல்லை என்றார் ராஜசேகரன்.
செய்தி : வெற்றி விக்டர் / இ.எஸ் காளிதாசன்
0 Comments