கோலாலம்பூர் ஏப்ரல் 19
மலேசிய சிகை அலங்கார துறையினர் இன்னும் என்ன தான் முயற்சி எடுக்க வேண்டும் என எங்களுகே தெரியவில்லை என மிண்டாஸ் எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கத்தின் காப்பாளர் டத்தோ மகேந்திரன் தெரிவித்தார்.
அந்நிய தொழிலாளர் வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்ட எங்கள் துறையைத் திறந்து விடுகிறோம் என்றார்கள். எங்கள் துறை உட்பட 3 துறைக்கு 7500 அந்நிய தொழிலாளர்கள் கொடுப்பதாக அறிவித்தார்கள்.
அறிவிப்பு கொடுத்தார்கள் அவ்வளவுதான் ! ஆனால் எங்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பதில் கடுமையான விதிமுறையை வைத்து எங்களை இன்னும் அப்படியே தான் வைத்துள்ளனர் என்றார் மகேந்திரன்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமைக்கு வந்தால் இந்தியர்களுக்கு விடிவு என்றார்கள். ஆனால் அன்வாரால் எங்களுக்கும் இந்த துறைக்கும் இன்னும் விடிவு இல்லை. எல்லாம் அறிவிப்பாக மட்டும் உள்ளது. நடைமுறையில் நாங்கள் இன்னும் அவதி படுகிறோம் என மகேந்திரன் தெரிவித்தார்.
செய்தி : வெற்றி விக்டர் இ.எஸ்.காளிதாசன்
0 Comments