loader
கேகேபி இடைத் தேர்தல்: 80% மலாய்கார வாக்குகளை பெரிக்காத்தான் வெல்லும்!

கேகேபி இடைத் தேர்தல்: 80% மலாய்கார வாக்குகளை பெரிக்காத்தான் வெல்லும்!

கோலாலம்பூர், ஏப்.16-

அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய்க்கார வாக்குகளை பற்றி பெரிக்காத்தான் நேஷனல் கவலைப்பட போவதில்லை என்றும் 70 முதல் 80 விழுக்காடு மலாய்க்கார வாக்குகளை அக்கூட்டணி வெல்லலாம் என்றும் அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

சிலாங்கூரிலுள்ள மலாய்க்காரர்களில் பெரும்பகுதியினர் பெரிக்காத்தான் நேஷனலை முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆகையால் கோல குபு பாரு இடைத்தேர்தலில் அக்கூட்டணி சீனரையோ அல்லது இந்தியரையோ வேட்பாளராக நிறுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என நுஸாந்தாரா அக்கடமியை சேர்ந்த அஸ்மி ஹசான் தெரிவித்தார்.

ஆகையால் இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை மீட்பதே பெரிக்காத்தான் நேஷனலின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். 

இந்த இடைத்தேர்தல் அம்னோவிற்கு மற்றோரு பலப்பரீட்சையாக அமைந்துள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்காக மலாய்க்காரர்களின் வாக்கை மீட்க அது கடுமையாக போராடியாக வேண்டும் என்றார் அவர்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெரிக்காத்தானுக்கும் சீனர்களின் வாக்குகள் பக்காத்தானுக்கும் செல்லும் நிலையில், வெற்றியை நிலைநாட்ட போவது இந்தியர்களின் வாக்குகள் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News