சேலம் ஏப்ரல்-15
சேலம் மாவட்டத்தில் புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனத்தின் இணை கட்டடம் மற்றும் ஆக்கம் 360-ன் innohub என்கின்ற மென்பொருள் அலுவலக திறப்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 14 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் மற்றும் மணக்குல விநாயகா மருத்துவக்கல்லூரியின் தலைவரும் , தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான எம் . தனசேகரன் அவர்கள் கலந்து கொண்டு இணைக்கட்டடம் மற்றும் ஆக்கம் 360இன் மென்பொருள் நிறுவன அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.
கல்லூரி தலைவர் சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் நடந்த இவ்விழாவில், தலைமை இயக்குனர் திருமூர்த்தி ஆறுமுகம், இணைச் செயலாளர் கோகிலா ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0 Comments