கோலாலம்பூர் ஏப்ரல் - 8
சுகம் அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைப்பெற்ற தமிழிசைச் சாரல் இசை நிகழ்ச்சி மிகவும் 3 மணி நேரம் அனைவரையும் கட்டிப்போட்டது என
மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மாபெரும் இசை படைப்பை கண்டு பிரமித்தேன். 3 மணி நேரம் இசையோடு பயணித்தேன் என டத்தோ ஸ்ரீ சரவண்ன கலைஞர்களை பாராட்டினார்.
108 கலைஞர்களின் படைப்பு நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, தமிழ் மொழியின் அமுதமாக மிகச் சிறப்பாக நடத்தபட்ட நிலையில் டாக்டர் தேவி அவர்களின் பயிற்சியில் மாணவர்களின் இந்தத் திறமை இசைத்தமிழுக்கு ஒரு பரசு .
சுகம் தொடர்ந்து இப்படி பட்ட படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments