loader
அண்ணன் எனக்கு விட்டு கொடுத்தார் !  - அர்விந்த் கிருஷ்ணன் தம்பி நீ முன்னே போ! நான் உன்னோடு இருக்கிறேன் ! - கேசவன் கந்தசாமி

அண்ணன் எனக்கு விட்டு கொடுத்தார் ! - அர்விந்த் கிருஷ்ணன் தம்பி நீ முன்னே போ! நான் உன்னோடு இருக்கிறேன் ! - கேசவன் கந்தசாமி

கோலாலம்பூர்  ஏப்ரல் -6

ம.இ.காவின் தலைமையில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோ ஸ்ரீ சரவணன்  எப்படி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் இருக்கிறார்களோ.

அதே போல் ம.இ.கா இளைஞர் பிரிவும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை. இது ஒரு குடும்பம். நமது ஒற்றுமையே நம் பலம் என்பதே தலைமை எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் !

அந்த வகையில்  நீண்டகாலமாக ம.இ.கா இளைஞர் பிரிவில் சேவையாற்றி வரும் நானும் , அண்ணன்  கேசவன் கந்தசாமியும்  இந்த முறை தலைமை பொறுப்புக்கு வர நினைத்த போது இருவரும் அவர் அவர் விருப்பத்தைக் கலந்து பேசியபோது, அண்ணன் கேசவன் கந்தசாமி எனக்காக ம.இ.கா தேசியத் இளைஞர்  பிரிவு தலைவர் பதவிக்குப் போட்டி போடுவதை விட்டு கொடுத்தார். இருவரும் இணைந்தே பயணிப்போம் என்று கூறியதாக அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார். அந்த வகையில் நான் இம்முறை நடக்கும் ம.இ.கா தேசியத் இளைஞர் பிரிவு தேர்தலில் மாநில இளைஞர் பிரிவின் ஆசியுடன் போட்டியிடுவதாக அர்விந்த் கிருஷ்ணன் இன்று அறிவித்தார்.

அதே மேடையில் பேசிய கேசவன் கந்தசாமி நானும் அர்விந்த் கிருஷ்ணனும் நீண்ட காலமாக பயணிக்கிறோம். பல இளைஞர் பிரிவு தலைவர்களுடன் பயணித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. 

 ம.இ.கா தலைமை போல் இளைஞர் பிரிவும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தம்பி நீ முன்னே போ எப்போதும் போல்  நான் உன்னோடு இருக்கிறேன் என  கூறிய கேசவன் கந்தசாமி தான் இம்முறை ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவருக்கு போட்டியிட போவதாக அறிவித்தார்.

 இந்த இருவர் தவிர வேறு யாராவது போட்டி போட உள்ளார்களா ? என அர்விந்த் கிருஷ்ணனிடம் கேட்ட போது   இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்குப்  போட்டியிட இருந்த கேசவன் இளைஞர் பிரிவின் ஒற்றுமைக்காக  விட்டு கொடுத்துவிட்டார். வேறு யாராவது போட்டி போடுவார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை . தேர்தல் நேரத்தில் தான் தெரியும். எங்கள் இருவரின் விருப்பத்தை  நாங்கள் இன்று மாநில  இளைஞர் பிரிவை அழைத்து தெரிவித்து விட்டோம் என்றார் அர்விந்த்.

செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News