loader
நாட்டில் புதிய ஜோதிடர் உதயம் !  நடப்பது நடக்கபோவது எல்லாம் அறிந்தவராம்  !

நாட்டில் புதிய ஜோதிடர் உதயம் ! நடப்பது நடக்கபோவது எல்லாம் அறிந்தவராம் !

கோலாலம்பூர் ஏப்ரல்-5

நாட்டில் இப்போது ஜோதிடர் ஒருவர் புதிதாக உதயமாகி உள்ளார். நடப்பது நடக்க போவது அனைத்தையும் சொல்பவராக அவர் இப்போது தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்.

குறிப்பாக அரசியல் சார்ந்த விஷயங்களில் துல்லியமாக அவர் ஜோதிடம் சொல்வாராம்.

யார் அடுத்த பிரதமர் , யார் அடுத்த மந்திரி ,யார் அடுத்த தலைவர் என துல்லியமாக கணிக்கும் வல்லமை கொண்டவர்.

ஆனால் திருமணம்,  குழந்தை ஜாதகம், பெயர் சூட்டும் வகையில் இன்னும் அவர் விளம்பரம் செய்யவில்லை.

இப்போதைக்கு அரசியல் ரீதியில் ஜோதிடம் செய்யும் அவரை காண விரும்புபவர்கள்.  தற்போது அவர் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து வருகிறார் அதன் வாயிலாக அவரை அணுகினால். நன்றாக ஜோதிடம் பார்ப்பார்.

இப்போது ஒரு தொழில் முனைவரின்  வழக்கு ஒன்று  ஓடிக்கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் அதன்  முடிவு எப்படி வரும் என்பதை கணித்து சொல்வாரா தெரியவில்லை.

அல்லது  வரும் கே.கே.பி இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் என்பதை கணித்து சொல்வாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் சொன்னால் நடக்கும் என்கிறார் அந்த புதிய ஜோதிடர்.

செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News