loader
டத்தோ ஸ்ரீ அன்வார் முடிவு எடுத்து விட்டாரா ? அவர் மீண்டும்  அமைச்சராக வருகிறாரா ?

டத்தோ ஸ்ரீ அன்வார் முடிவு எடுத்து விட்டாரா ? அவர் மீண்டும் அமைச்சராக வருகிறாரா ?

கோலாலம்பூர் ஏப்ரல் -5

பாக்காத்தான் கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்களிடையே  ஒற்றுமை இல்லாத நிலையில்
கடந்த 6 மாதங்களாக இவர்களிடம் இருந்தும்  இன்னும் வெளியில் சிலராலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்குப் புகார் மேல் புகார் கிடைத்த வண்ணமாகவே இருந்தது. பிரதமரிடம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகார் சொல்லி வந்துள்ளனர்.

 அதன் உச்சகட்டம் தான் மித்ரா  இங்கும் அங்கும்  பந்தாடப்பட்டது. இப்போது  அது மீண்டும் பிரதமர் துறைக்கு  வந்தது. இந்நிலையில் இந்த பொறுப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிரபாகரனுக்கு கிடைக்க கூடாது என ஒரு கூட்டம் தீவிரமாக செயல்படுவதாகவும். 

இன்னொரு கூட்டம் , துணை அமைச்சர்  ஒருவரை பதவி விலக அழுத்தம் கொடுத்து வருவதாக  தகவல் கசிந்துள்ளது.

இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கும் பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார்,  தனது கூட்டணி கட்சிக்கு வெளியில் ஓர் இந்திய  அமைச்சரை, அமைச்சரவையில்  தேர்வு செய்துள்ளதாகவும் விரைவில் அமைச்சரவையில் சிறிய மாற்றம் எற்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன் அமைச்சராக இருந்த ஓர் இந்தியத் தலைவர், அன்வாரின் அமைச்சரவையில் இடம் பெறவிருப்பதாகவும் அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது  எனவும் கே.கே.பி தேர்தலுக்குப் பின் பிரதமர் ஒரு முடிவை எடுப்பார் எனவும் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சரவையின் உள்ளே வரப்போவது யார் வெளியே போகப்போவது யார் என்பது விரைவில் தெரியவரும்  என  இப்போதே அரசியல் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News