loader
கேகே மார்ட் கிளைகள் தாக்கப்பட்ட விவகாரம்: தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டம் நடத்தப்பட வேண்டும்!  பிரதமருக்கு வலியுறுத்து!

கேகே மார்ட் கிளைகள் தாக்கப்பட்ட விவகாரம்: தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டம் நடத்தப்பட வேண்டும்! பிரதமருக்கு வலியுறுத்து!

கோலாலம்பூர், ஏப். 2-

கேகே மார்ட் கிளைகளில் நடத்தப்பட்டு வரும் குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து உடனடியாக தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டத்தை பிரதமர் நடத்த வேண்டுமென பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

இந்த தாக்குதல்களுக்கு முன்றுப் புள்ளி வைக்கும் வகையிலும் நாட்டின் பாதுகாப்பு மட்டும் அமைதி நிலை நிறுத்த  இக்கூட்டம் நடத்தப்பட்ட வேண்டுமென அவர் சொன்னார்.

கேகே மார்ட் விவகாரத்தில் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே நடத்திய பிரச்சாரத்தினால்தான் நிலைமை மோசமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்.

காலுறை விவகாரத்தினால் இதுவரை நாட்டில் உள்ள மூன்று கேகே மார்ட் கிளைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க உடனடியாக தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மசீச தலைவருமான அவர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News