loader
சம்ரி வினோத் - சந்திரா மீது நடவடிக்கை எடுப்பீர் ! ம.இ.கா இளைஞர் பிரிவு போலீஸ் புகார் !

சம்ரி வினோத் - சந்திரா மீது நடவடிக்கை எடுப்பீர் ! ம.இ.கா இளைஞர் பிரிவு போலீஸ் புகார் !

கோலாலம்பூர் மார்ச்- 30

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக  சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தி வரும் சம்ரி வினோத் மற்றும்  சந்திரா என்ற இருவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி ம.இ.கா  தேசிய இளைஞர் பிரிவின்    செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் தலைமையில்  போலீஸ் புகார் ஒன்று , இன்று  செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டது.

நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் தரும் தரப்பினர் அது யாராக இருந்ததாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட படி  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அர்விந்த்  தெரிவித்தார்.

3R சட்ட பிரிவின் கீழ் இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அர்விந்த்,  போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News