loader
பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் குறுக்கோட்ட போட்டி!  120 மாணவர்கள் பங்கு கொண்டனர்!

பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் குறுக்கோட்ட போட்டி! 120 மாணவர்கள் பங்கு கொண்டனர்!

பத்து ஆராங், மார்ச் 29-

பள்ளி அளவிலான குறுக்கோட்ட போட்டி இன்று தேசிய வகை பத்து ஆராங்  தமிழ் பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

சுமார் 120 மாணவர்கள் பங்கேற்ற இந்த குறுக்கோட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதலும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் முன்னிலையில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் அடுத்த கட்ட அளவிலான நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர் என பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். முனியம்மா தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதைப் போல் விளையாட்டு துறையிலும் அதிகம் நாட்டம் செலுத்தி விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி. சண்முகநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்த குறுக்கோட்ட போட்டி சிறப்பாக நடைபெற பக்கபலமாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு இவ்வேளையில் தாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி. சண்முகநாதன் தெரிவித்தார்.

-தீபன் கிருஷ்ணன்

0 Comments

leave a reply

Recent News