கோலாலம்பூர், மார்ச் 27-
தேசிய முன்னணியை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு நடப்பு அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு 2,200 மெட்ரிகுலேசன் சீட்டை ஒதுக்க வேண்டும் என முன்னாள் செடிக் இயக்குநர் டத்தோ என்.எஸ் ராஜேந்திரன் ஓர் ஆங்கில இணைய தளத்திற்கு கொடுத்த பேட்டியை தொடர்ந்து,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களின் அதிகாரபூர்வ facebook பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் டத்தோ என்.எஸ். ராஜேந்திரன் கருத்தை பதிவு செய்ததோடு ஆண்டுக்கு 2,200 சீட் தானே அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே என பதிவிடப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அது வழங்கப்பட வேண்டிய ஒரு நியாமான விஷயம், அதோடு கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில், அதிகமான இந்தியர்கள் தேசிய முன்னணியை புறக்கணித்தற்கு காரணம் சிலரின் பொய்யான பிரச்சாரம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments