கோலாலம்பூர், மார்ச் 26-
அல்லா என்ற சொல் பதிக்கப்பட்ட காலுறை விவகாரத்தில் இந்த தவற்றை புரிந்த தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இந்த விவகாரத்தில் சொந்த முடிவை எடுக்கும் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சைப்பூடின் நசுத்தியோன் கூறினார்.
இந்த நாட்டில் சட்டம் உண்டு. அதனை பின்பற்ற வேண்டும். சொந்த முடிவை எடுப்பவர்களை போலீஸ் சும்மா விடாது என அவர் சொன்னார்.
அப்படியே தனி நபரை முடிவு எடுக்க விட்டால் நாட்டின் அமைதி சீர்குழைந்துவிடும் என்றார் அவர்.
இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம். நாட்டு மக்களின் நலன், பொருளாதாரம், உதவித் தொகை போன்றவற்றை பற்றி பேச வேண்டிய காலக்கட்டம் இது என அவர் சொன்னார்.
0 Comments