loader
பாலர்பள்ளி மாணவர்கள் பாடத்திட்ட கையேடுகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்!

பாலர்பள்ளி மாணவர்கள் பாடத்திட்ட கையேடுகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்!

தாப்பா, மார்ச் 20-

ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தயார் படுத்துவதற்கு பாலர்பள்ளியில் இணைவது மிகவும் முக்கியம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அந்த வகையில் தாப்பா தமிழ்ப்பள்ளி மற்றும் கீர் ஜொஹாரி தமழ்ப்பள்ளிகளிலுள்ள பாலர்பள்ளி மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடத் திட்ட கையேடுகளை மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான அவர் எடுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை தாப்பா, மஇகா தொகுதி அலுவலகத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பாலர்ப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் உட்பட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், பாலர்பள்ளி கல்வியின் முக்கியதுவத்தை பற்றி பேசினார். கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த பாடத் திட்ட கையேடுகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News