கோலாலம்பூர்,மார்ச் 18-
பிள்ளைகளுக்கு தேர்வு இல்லை என்றால் இடைநிலைப் பள்ளிகளில் புகுமுக வகுப்பு ஏன் உள்ளது.
தேர்வு உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும் என ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.
ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கியது முதல் 6ஆம் ஆண்டு மாணவர்கள்தான் இங்கு அதிகம் வந்து கல்வி பயில்கின்றனர்.
ஆனால், இம்முறை 6ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.
இதற்கு காரணம் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதாதது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. புகுமுக வகுப்பை தாண்டி மாணவர்கள் எப்படி நேரடியாக படிவம் 1க்கு செல்கிறார்கள் என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும்.
அதற்கு பிள்ளைகளை தயார் செய்வது குறித்தும் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.
அதற்கு தேர்வு உள்ளதா இல்லையா என்பது குறித்து சிந்திகாமல் பிள்ளைகளை எப்படி அனைத்து சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய சமூகம் எந்த வகையில் பிரிந்து இருந்தாலும் கல்வி என்று வந்தால் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.
இது தான் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு என்று சுரேந்திரன் கூறினார்.
0 Comments