loader
காலுறை விவகாரத்தை பெரிது படுத்தாதீர்! -மசீச வலியுறுத்து

காலுறை விவகாரத்தை பெரிது படுத்தாதீர்! -மசீச வலியுறுத்து

கோலாலம்பூர்,மார்ச் 18-

கேகே மார்ட் கடையில் அல்லாஹ் என்று எழுத்தப்பட்ட காலுறைகள் வைக்கப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேவை மசீச வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கேகே மார்ட் கடைகளையும் புறக்கணிக்க வேண்டும் என அக்மால் கூறுவதில் நியாயமில்லை என மசீச பொதுச் செயலாளர் சோங் சின் ஹுன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

சர்ச்சையான காலுறை விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டுவிட்டது. ஆனால் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் புறக்கணிக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.  இதனால் நம் நாட்டிற்குதான் பாதிப்பு என்பதை அக்மால் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News