loader
டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்த காலகட்டம்  ஒரு பொன்னான காலகட்டம் ! அவர் மீண்டும் அமைச்சராக வரவேண்டும் ! -MMYC  வலியுறுத்தல் !

டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்த காலகட்டம் ஒரு பொன்னான காலகட்டம் ! அவர் மீண்டும் அமைச்சராக வரவேண்டும் ! -MMYC வலியுறுத்தல் !

கோலாலம்பூர் -மார்ச் 17 

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரை, ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன்  அமைச்சரவையில் இருந்த காலம் ஒரு பொன்னான காலம் என இன்று  பி.ஜே, சிவிக் செண்டரில்    எம்.எம்.ஒய்.சி  ஏற்பாட்டில் நடைப்பெற்ற புனித நோன்பு  துறப்பு  நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் ஆலோசகர்  முகமாட் அஷ்ரீன்  இவ்வாறு தெரித்தார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமுதாயத்தைச் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டன.
அதனால் தான் ,  டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ,  அவர் மீது மதிப்பும் பாசமும் வைத்து அவரைத்  இன்று தலைமை தாங்க அழைத்தோம் என அஷ்ரீன்  தெரிவித்தார்.

அவர் எங்கள் அமைப்புக்குக் கொடுத்த நிதியை கொண்டு கடந்த  2 ஆண்டுகள் சமுதாயத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தோம்.
எங்களைப் பொறுத்தவரை டத்தோ ஸ்ரீ சரவணன்  மீண்டும் அமைச்சரவையில் இருக்கவேண்டும். அவரின் தலைமை சமுதாயத்திற்கு தேவை என எம்.எம்.ஒய்.சி வலியுறுத்துவதாக அஷ்ரின் தனது உரையில் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News