loader
இதுவரை 5 மில்லியன் பேர் PADU-வில் பதிந்துள்ளனர்!

இதுவரை 5 மில்லியன் பேர் PADU-வில் பதிந்துள்ளனர்!

 

கோலாலம்பூர், மார்ச் 17-
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 5.02 மில்லியன் மலேசியர்கள் PADU-வில் பதிவு செய்துள்ளனர். மார்ச் 31 காலக்கெடுவை முன்னிட்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.

"மார்ச் 15, இரவு 11.59 மணிக்கு, தங்கள் பதிவுகளை புதுப்பித்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 5.02 மில்லியன்" என்று PADUவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது 16.7% மலேசியர்கள் மற்றும் PR வைத்திருப்பவர்கள் PADU-வில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்து புதுப்பித்துள்ளனர்.

30.08 மில்லியனில் குழந்தைகள் உட்பட அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் தகவலைப் புதுப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் பதிவு செய்ய வேண்டிய இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை 21.97 மில்லியன் ஆகும்.

சிலாங்கூர் 760,000 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களைப் பதிவுசெய்துள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (630,000) மற்றும் ஜொகூர் (500,000) உள்ளன.

0 Comments

leave a reply

Recent News