loader
சொந்த குழந்தையை கொலை செய்த தாய்!  பாசிர் கூடாங்கில் சம்பவம்

சொந்த குழந்தையை கொலை செய்த தாய்! பாசிர் கூடாங்கில் சம்பவம்


பாசிர் கூடாங், மார்ச் 17-
தன் ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் அருத்து கொலை செய்து விட்டு அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து தன் கணவரின் கைப்பேசிக்கு அனுப்பியுள்ள மாதின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட 32 வயது மாதை போலீசார் கைது செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News