செத்தியு, மார்ச் 16-
நேற்று இரவு கோல திரெங்கானு கம்போங் ராஜா வழியாக போர்ஷே காரில் சென்றுக்கொண்டிருந்த நிருவன உரிமையாளர் ஒருவர் அங்கு சாலையை கடக்க முயன்ற யானையை மோதி விபத்தில் சிக்கினார்.
இச்சம்பவம் இரவு 10 மணி அளவில் ஜாலான் ரூ-வில் இருந்து லெம்பா பீடோங் செல்லும் சாலையில் நிகழ்ந்துள்ளது. யானையை மோதியதில் போர்ஷே ரக கார் சேதமடைந்தது, ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் அதிர்ஷ்டவசமாக எவ்வித கடுமையான காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியதாக செத்தியு மாவட்ட போலீஸ் தலைவர் அப்பண்டி உசேன் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் சாலையில் அந்த 42 வயதுடைய ஆடவர் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது சாலையில் யானை இருப்பதை கண்டு அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை இழந்து யானையை மோதியதாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்த யானை சில மணி நேரங்களுக்கு பிறகு சாலையில் இருந்து அருகில் உள்ள காட்டிற்குள் ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.
0 Comments