கோலாலம்பூர், மார்ச் 14-
மலேசியத் திரைப்படங்கள் தற்போது கதை, திரைக்கதை, வசனம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு வருவதாக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
அதேபோல் வசூல் ரீதியாகவும் மலேசியத் திரைப்படத்தின் சாதனை வரவேண்டும். அந்த வகையில் ஒரு கதை சொல்லுங்க சார் , திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி என அவர் சொன்னார்.
நல்ல நல்ல திரைப்படங்களை மலேசிய கலைஞர்கள் கொடுக்க வேண்டும். அவர்களின் படைப்புக்கு மலேசிய மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
0 Comments