loader
கோழி விலை 30 சென் உயர்ந்தாலும் உச்சவரம்பை தாண்டவில்லை ! -டத்தோ ஸ்ரீ முகமாட் சாபு

கோழி விலை 30 சென் உயர்ந்தாலும் உச்சவரம்பை தாண்டவில்லை ! -டத்தோ ஸ்ரீ முகமாட் சாபு

கோலாலம்பூர்,மார்ச் 14-

கோழியின் விலை 30 சென் அதிகரித்தாலும் அதன் உச்சவரம்பு விலையான 11.40 வெள்ளியைத் தாண்டவில்லை என  விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமாட்  சாபு தெரிவித்தார். 

நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் கோழியின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல்  இருக்க  சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன்  தனது  தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.

கோழியின் விலை, முன்பு நிர்ணயித்த விலையுடன் ஒப்பிடும்போது  நிலையாக உள்ளது. 

மைடின் பேரங்காடியில் கோழி 9 வெள்ளிக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. சில சமயங்களில் 7.90, 8.00 வெள்ளிகளில் கோழி விற்பனை செய்யப்படுகிறது என மட் சாபு தெரிவித்தார்.

கடந்தகாலங்களை விட  அரசு நிர்ணயம் செய்த விலையை விட  இது அதிகமாக இல்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News