loader
ரொஹிங்யா மாதும் 2 வயது குழந்தையும் எரியூட்டப்பட்ட கொடூரம்!

ரொஹிங்யா மாதும் 2 வயது குழந்தையும் எரியூட்டப்பட்ட கொடூரம்!

செராஸ், மார்ச் 13-

அடையாளம் தெரியாத இரு ஆடவர்களால் ரொஹிங்யா மாது ஒருவரும் அவரின் 2 வயது குழந்தையும் எரியூட்டப்பட்ட சம்பவம் செராஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை செராஸிலுள்ள விளையாட்டு பூங்காவில் இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட மாதின் கணவர் ஷாபிர் சுல்தான் அகமட் கூறினார்.

சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட அஸுமா என்ற மாது சமய வகுப்பிற்கு சென்ற தன் பிள்ளைகளை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் குழந்தைகள் இதர பிள்ளைகளுடன் அங்குள்ள விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

தன் குழந்தைகளுக்காக அவர் அந்த பூங்காவில் தன் இரண்டு வயது குழந்தையை தூக்கியவாறு காத்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அஸுமா மீது எண்ணெய்யை ஊற்றியதுடன் அவரையும் அவரின் குழந்தையையும் எரியூட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மக்கள் அஸுமாவையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றி அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அஸுமா மருத்துவமனையில் சுயநினைவு திரும்பாத நிலையில் இருக்கும் வேளையில் அவரின் குழந்தை சீராக உள்ளதாக செராஸ் போலீஸ் படைத் தலைவர் ஜாம் அலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த கொடூரச் செயலை புரிந்த அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் செக்‌ஷன் 326 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News