கோலாலம்பூர், மார்ச் 13-
இஸ்ரயேல் - பாலஸ்தீன போரில் ஹாமாஸ் அமைப்பிற்கு மலேசிய ஆதரவு தெரிவிப்பதாக ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஹமாஸ் அரசியலுக்கு மலேசியா ஆதரவு வழங்குகிறது. ஆனால் அதன் ராணுவ பிரிவுடன் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் கூறியதாக பெர்லின் உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போர் தற்போது தொடங்கியது அல்ல. காலம் காலமாக தொடர்கிறது. ஹமாஸ் நிர்வாகத்திற்கு மலேசியா ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலுள்ள சகாக்களிடம் விளக்கியதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறியுள்ளார். மேலும் ஹமாஸ் அரசியலுடன் மலேசியா தொடர்பு வைத்திருப்பதை தொடர்ந்து தான் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் அவர் கூறியாதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments