loader
மூவர் சுட்டுக் கொலை!

மூவர் சுட்டுக் கொலை!

குவாந்தான்,மார்ச் 12-

கொள்ளச் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்த சென்ட்ரோ கும்பலைச் சேர்ந்த மூன்று அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக் கொண்றனர்.

கிலோமீட்டர் 17, ஜாலான் பெக்கான் பகுதியில் இரவு 11.30 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது, அந்த வாகனம் போலீசார் வாகனத்தை மோதி தள்ளி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது வாகனத்திலிருந்து அந்த சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் தங்களின் பாதுகாப்பிற்காக போலீசார் மீண்டும் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்  மூவர் கொல்லப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யாயா ஒத்மான் தெரிவித்தார்.

இந்த கும்பல் பல பகுதிகளில் வீடு மற்றும்  நகைக்கடையில் கொள்ளையிடுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கொல்லப்பட்டவர்களில் இருவர் வியட்நாமியர், ஒருவர்  வங்காளதேசியர் என உறுதிப்படுத்தப்பட்டதாக யாயா ஒத்மான் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News