loader
காட்டு தீயை அணைக்க 3 மணி நேரம் போராட்டம்!

காட்டு தீயை அணைக்க 3 மணி நேரம் போராட்டம்!

சிக்,மார்ச் 12-

திடீரென ஏற்பட்ட காட்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடியதாக தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்தது.

இங்குள்ள செபார் பெசார் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டில் ஏற்பட்ட தீச் சம்பவம் தொடர்பில் காலை 9 மணி அளவில்  அவசர அழைப்பு  பெற்ற பின் சம்பவ இடத்திற்கு 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிக் மாவட்ட தீயணைப்புத் துறையின் உதவி தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.

10 ஹெக்டரில் எரிந்த தீயை அணைக்க 500 மீட்டர் உயரமுள்ள மலையில் தீயணைப்பு வீரர்கள் ஏறியதாகவும் அதிகமான வெப்பமும் காற்றின் அழுத்தத்தாலும் தீயை அணைக்க பல போராட்டங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 266.50 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த காட்டுப் பகுதியில் தீ பெருமளவில் பரவாமல் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சுல்கைரி பத்திரிக்கை அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News