loader
பதுக்கிவைக்கப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் டீசல் எண்ணெய் பறிமுதல்!

பதுக்கிவைக்கப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் டீசல் எண்ணெய் பறிமுதல்!

சிப்பாங்,மார்ச் 11-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் டீசல் எண்ணெய் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

கடந்த மார்ச்  8 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இங்குள்ள கம்போங் பத்து 1, டிங்கிலில்  உள்ள ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இடத்தில் டீசல் எண்ணெய் பதுக்கி வைப்பதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும்  பயன்படுத்தப்பட்டுவந்தது கண்டறியப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பே அந்த பகுதியை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்தது.

இந்த கும்பல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்களில் மானிய விலையில் உள்ள எண்ணெய்களை நிரப்பிக் கொண்டு ஒரு பகுதியில் சேமித்து வைத்து, பின்னர் கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் டீசல் எண்ணெய்,லோரி, டீசல் சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் கருவிகள் ஆகியவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் மதிப்பு வெ.49,100.00 என தெரிவித்தது.

0 Comments

leave a reply

Recent News