சிரம்பான்,மார்ச் 11-
சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெ.13.4 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் கிள்ளான் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளில் இந்த பறிமுதல் செய்யப்பட்டதோடு ஐவர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில சுங்கத் துறை இயக்குநர் முகமது ஹபீஸ் இஷாக் கூறினார்.
இந்த சோதனையின் முதல் கட்டமாக நெகிரி செம்பிலான் அமலாக்கப் பிரிவின் உறுப்பினர்கள் மூன்று கொள்கலன்களை மார்ச் 26ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைத்ததோடு சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அதன் இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் அந்த கொள்கலன்களை சோதனை செய்ததில் பல்வேறு வகையான மதுபானங்களும் சிகரெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
சீனா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த கொள்கலன் நம் நாட்டில் இருந்து அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஹபீஸ் இஷாக் பத்திரிக்கை அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
0 Comments