அலோர் காஜா, மார்ச் 11-
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 220.4ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து டிரெய்லரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியான வேளையில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் காயங்களுக்குள்ளாகினர்.
அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உடல் நசுங்கி மாண்டார் என அலோர் காஜா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.
விபத்தில் காயமுற்ற 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பேருந்து பயணிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட பேருந்து ஜொகூர் லாக்கின் பேருந்து நிலையத்திலிருந்து 30 பயணிகளுடன் தலைநகரிலுள்ள திபிஎஸ் பேருந்து நிலையத்திற்கு பயணித்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அவர் சொன்னார்.
0 Comments