ஈப்போ மார்ச் - 9
அண்மையில் பேராக்கில் உள்ள ஈப்போ கே.டி.எம் ரயில் நிலைய சுற்றுலா பதாகையில் மலாய் ,ஆங்கிலம் , சீன , தாய்லாந்து மொழிகளில் வருகை பதாகை இருந்த நிலையில் , தமிழ் மொழி புறக்கணிக்க பட்டது தொடர்பாக பல விதமான சர்ச்சைகள் எழுந்தன.
இது இந்திய மக்களிடையே மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று மலேசிய வீர தமிழர் இயக்கம் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மலேசிய சுற்றுலா துறை அமைச்சு, மாநில சுற்றுலா துறைக்கு மகஜர் அனுப்பியதோடு ஈப்போ ரயில் நிலைய அதிகாரி சாஃபுவானை நேரடியாக சந்தித்து மகஜர் அவர்கள் வழங்கினர்.
எல்லா எதிர்ப்பையும் வாட்சாப்பில் தெரிவிக்காமல் தமிழர்கள் முன் வந்து மகஜர் வழங்க வேண்டும் என தெரிவித்த மலேசிய வீர தமிழர் இயக்கத் தலைவர் பார்த்திபன் சரவணன், இயக்கங்கள் முன் வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments