கோலாலம்பூர் மார்ச் - 8
இன்று புத்ரா உலக வாணிக மண்டபத்தில் ஒரு மாபெரும் தமிழ் படைப்பை 12 ஆய்வாளர்கள் ஆய்வு செய்து மகா கவிதை என்ற புத்தகத்தை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு "பெருந்தமிழ்" விருது விழா இனிதே அரங்கம் நிறைந்து நடைபெற்று வருகிறது.
தமிழுக்காக நடக்கும் விழாவிற்கு தமிழர் கூட்டம் நிறைந்து வந்து அதை நடத்தி காட்டினர்.
ஒரு சில குழுவினர் இந்த விழா நடக்குமா ? எப்படி நடக்கும் என கொக்கரித்த நிலையில் , தமிழுக்காக நடக்கும் விழாவை நடத்தி காட்டினார் ம.இ.காவின் துணை தலைவர் சொல் வேந்தர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments