loader
தமிழ் படைப்புக்கு நடக்கும் விருது  விழாவை நடத்துவது செந்தமிழ் சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன்!

தமிழ் படைப்புக்கு நடக்கும் விருது விழாவை நடத்துவது செந்தமிழ் சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன்!

கோலாலம்பூர், மார்ச் 3-

ஒரு தமிழ் படைப்புக்கு  மலேசியாவில் விருது கொடுக்க 12 தமிழ் கல்வி ஆய்வாளர்களின் முயற்சிக்குக் கைக்கொடுக்கும் வகையில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் முன்னெடுத்த முயற்சி தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எந்த புல்லுருவிகள் பல நாடகம் போட்டலும் ... ஜாதி அடிப்படையில் உள்ள சில சில்லறைகள் தமிழ் மொழியை விட சுய அரசியலுக்காக நடத்தும் நாடகம் அனைத்தும் , இந்த நாட்டில் தமிழ் மொழி-சமயம் இரண்டும் என் கண்கள்  என கூறும் டத்தோஸ்ரீ சரவணனிடம் பலிக்காது... 

இந்த கூட்டம்  தான் டத்தோஸ்ரீ சரவணன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்ற கூடாது என பல முயற்சி எடுத்தும்.. அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி ஒரு தமிழ் தலைவர் 5 நிமிட வாய்ப்பில்  தனது உரையில் அரங்கத்தை அதிர வைத்தார் என்பது நடப்பு நிலவரம். அது அவர்களுக்கும் தெரியும்...

இன்று தமிழுக்காக ஒரு படைப்பாளி கொடுத்த மகா கவிதை படைப்புக்கு  பெருந்தமிழ் விருதை  வழங்க செந்தமிழ் சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன் ஏற்பாட்டில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை.. எந்த நாச வாதிகள் திசை திருப்பினாலும்...  நிகழ்ச்சி நடைப்பெறும் காரணம் நிகழ்ச்சியை நடத்துவது தமிழ் சமுதாயத்தின் சமயம் மற்றும் மொழியின் காவலர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

 தமிழ் மொழி சார்ந்த விசியங்களில்....எந்த ஜாதி அரசியல் வந்தாலும் தமிழே முதன்மை.

செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News