loader
இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 36 தமிழ் பள்ளிகளுக்கும்- 16 ஆலயங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன!

இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 36 தமிழ் பள்ளிகளுக்கும்- 16 ஆலயங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன!

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.2-

பெட்டாலிங் ஜெயாவில் வீற்றிருக்கும் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவ திரு பால யோகி சுவாமிகளின் ஆசியோடு உலக வரலாற்று பதிப்பக தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் இன்று தமிழ் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்த நூல்கள் இலவசமாக தமிழ் பள்ளிகளுக்கும் திரு கோவில்களுக்கும் வழங்கப்பட்டதாக  இருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு முன்னிலையில் தமிழ்ப் பள்ளி பொறுப்பாளர்களிடம் இந்த நூல்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய அவர், நம் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை ஒழுக்கமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு முறையான  சமயக்கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். ஒவ்வொறு பெற்றோர்களும் இதனை கருத்தில்கொண்டு தனது குழந்தைகளுக்குக் கட்டாயமாக சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு வழி வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News