loader
செக் வைத்த அரசு...  மன்னிப்புக் கேட்க மறுத்த விஜய்...  களத்தில் குதித்த விஜய்யின் தந்தை!

செக் வைத்த அரசு... மன்னிப்புக் கேட்க மறுத்த விஜய்... களத்தில் குதித்த விஜய்யின் தந்தை!

 

விஜயின் பிகில் திரைப்படத்திற்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த பணத்தில் பாதியை கேட்டு பிரச்சனை செய்ய, செய்வதறியாது தவித்து வருகிறது தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி குழுமம்.

என்றாலும் தங்களுக்கு நெருக்கமான, அரசியல் பிரமுகர்கள் வாயிலாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பு நிறுவனம் முயன்றாலும், விஜய் வந்து தங்களிடம் பேசும் வரை எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை என ஒற்றைக் காலில் நிற்கிறது நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சி.

இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் விஜயை அணுகினால், அவரோ என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

என்றாலும் சமாதானப் பேச்சுவார்தைக்கு விஜய் தந்தை சந்திர சேகர் அவர்கள் அழைக்கப்பட்டு, அவரும் 'எடப்பாடி எங்களுக்கு தந்தை மாதிரி' என்றெல்லாம் வெள்ளைக் கொடி காட்டி இருந்தார்.

இருந்தாலும் விட மறுக்கும் அரசியல் கட்சி, நடிகர் விஜயே நேரில் வந்து பேசினால் ஒழிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டாது என செக் வைத்து விட்டதாம்!

0 Comments

leave a reply