loader
கொலிசியம் திரையங்கில் அலையென திரண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

கொலிசியம் திரையங்கில் அலையென திரண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

கோலாலம்பூர், ஆக.10-
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள வேளையில் இன்று காலையில் கொலிசியம் திரையரங்கில் மலேசியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அலையென திரண்டனர்.

மலேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஜெயிலர் திரைப்படத்தில் முதல் காட்சி நடைபெற்றது. இந்த திரைப்பட காட்சிக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஜெயிலர் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கு
ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் மலேசிய ரஜினி ரசிகர்களின் பட்டாளம் இங்கு கூடியது. இந்த திரைப்பட முதல் காட்டிக்கு புளு பெரதர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரசிகர் மன்றமும் இணை ஆதரவாளர்கள் ஆவர்.

மன்றத்தின் உறுப்பினராக இருந்த Sara மறைந்ததை தொடர்ந்து அவரின் புதல்வருக்கு காசோலை வழங்கப்பட்டது. அதன் பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

திரைப்படம் ஒளிப்பரப்பட்டதுடன் ரசிகர்களின் கோஷம் திரையரங்கை அதரவைத்தது.

தன் மகனை காப்பாற்ற ரவுடிகளை எதிர்க்கும் சூப்பர் ஸ்டாரின் flashback, அவரின் பவர் என்ன என்பதுதான் கதையின் சுவாரிசம். படத்தின் காட்சியமைப்புகள், சூப்பர் ஸ்டாரின் style வேற லெவல்... 1980இல் இருந்த சூப்பர் ஸ்டார் மீண்டும் வந்துவிட்டார் எனலாம். நாட்டிலுள்ள திரையரங்களில் சக்கப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை மக்கள் திரையரங்குகளில் கண்டு கழிக்கலாம்.

0 Comments

leave a reply