loader
திருமணம் ஆன 23 நாட்களில் ! குடும்பமே சேர்ந்து மனமகளை  கொன்று நாடகமா?

திருமணம் ஆன 23 நாட்களில் ! குடும்பமே சேர்ந்து மனமகளை கொன்று நாடகமா?

கோவை,மே 2

திருமணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை அவர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 காதலால்  அவசர கல்யாணத்தில் தொடங்கி இப்போது கொலையில் முடிந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

20 வயதான  இளம் ஜோடிகளான இவர்கள் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள்.  

பக்குவமற்ற மனநிலையில் வாழ்க்கையை கடைசியில் அது கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மகனின் கொலையை மறைக்க உதவி செய்த தாய், தந்தை இருவருமே விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த 20 வயதான சஞ்சய் என்ற இளைஞரும், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற பெண்ணும் காதலித்து கடந்த மே 6-ம் தேதி பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணி சென்று கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர், மத்துவராயபுரத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ரமணி உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவரின் உறவினர் புகார் கொடுத்ததை தொடர்ந்து சந்தேகம் எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்துப் பகுதி இறுக்கப்பட்டடு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரமணி உயிரிழந்தார் என்று  உறுதியானது.

இதையடுத்து, சஞ்சய், அவரது தாய் பக்ருநிஷா, தந்தை லட்சுமணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

0 Comments

leave a reply

Recent News