(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் செப்டம்பர் - 2
'காளி முனி தரிசனம்' திரைப்படம் பல சவால்களைத் தாண்டி திரைக்கு வெளிவந்த படம். இத்திரைப்படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் வெள்ளி வரை வசூலைக் குவித்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.
3 வாரங்கள் கடந்து இத்திரைப்படத்தின் வசூல் 114,222.50 வெள்ளி என ஃபினாஸின் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எது உண்மை? இந்தத் திரைப்பட விவகாரத்தில், சில முதலைகள் உள்ளே நுழைந்து விழுங்கியதாகவும் சொல்கின்றனர். யார் அந்த முதலைகள்? படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.தி.எஸ் இந்திரனுக்கே வசூல் எவ்வளவு என்பதை அறிவிக்காமல், டிமிக்கிக் கொடுக்கும் அந்த முதலை யார்?
முதல் வாரம் 2 லட்சம் வெள்ளி வசூல் என்று படக்குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இப்போது, அந்த வசூல் எப்படி 114,222.50 ஆகக் குறைந்தது? இதில் எது உண்மை?
அதோடு தனியார் வானொலி நிறுவனங்களுக்கும், ஊடக விளம்பரத்திற்கும் வேறு பாக்கி உள்ளதாம்.
இன்னும் சில படக் குழுவினர்களுக்கும் வழங்க வேண்டிய பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
'காளிமுனி தரிசனம்' திரைப்படத்தைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சு என்ன? ஏன் இவ்வளவு சிக்கல்? உண்மை நிலவரத்தை விளக்குவாரா டி.தி.எஸ் இந்திரன்?
0 Comments