loader
பயணி திடீர் மரணம்  பாகிஸ்தானில் இந்திய விமானம் தரையிறங்கியது!

பயணி திடீர் மரணம் பாகிஸ்தானில் இந்திய விமானம் தரையிறங்கியது!

புதுடில்லி, மார்ச்.14- 

புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற  இண்டிகோ' இந்திய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்ப்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியில் இருந்து மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த நைஜீரிய ஆடவருக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் கராச்சியில் உள்ள விமான நிலையத்திடம்  அனுமதி கேக்கப்பட்டது. அவர்கள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இண்டிகோ விமானம்  அவசரமாக தரை இரங்கியுள்ளது.
மருத்துவர்கள்அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கமான நடைமுறைகளை முடிப்பதற்காக விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

பயணியின் இறப்பு சான்றிதழை அதிகாரிகள் தயார் செய்து அளித்தனர். அதையடுத்து, 5 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம், அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

0 Comments

leave a reply

Recent News