புது 'டைம் லைன்' ஆரம்பம்!
(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், ஜனவரி- 17
கள்வனைக் கண்டுப்பிடி , கலயாணம் டூ காதல் மற்றும் இன்னும் சில தொடச்சியான வெற்றித் தொடர்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்து விட்டார் பாஷினி.
நீண்ட காலமாக மலேசியாவில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டு முன்னணி கதாநாயகிகளின் பெயரை சமீபகாலமாக மறக்கடித்தார் பாஷினி. இதற்கு முக்கியக் காரணம் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் இந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை கட்டிப்போட்ட 'கல்யாணம் 2 காதல்' தொடர்தான். அதில் வலம் வந்த சௌமியா என்ற கதாபத்திரம் வாயிலாக மக்கள் பாஷினியை சௌமியாவாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.
முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றதால், இந்தக் குழுவினருக்கு 'உலகம் விருது' விழாவில் அதிகமான விருதுகளைக் குவித்துள்ளது.
இந்த இரண்டு முன்னணி கதாநாயகிகளை முந்திச் செல்ல ஷாலினி பாலசுந்தரம் பல முயற்சிகளை எடுத்து வந்த வேளையில், சௌமியா என்ற கதாபாத்திரம் வாயிலாக தன்னை முன்னிலை படுத்திவிட்டார் பாஷினி.
கல்யாணம் 2 காதல் (கல்கி) பாணியில் சொல்லனும்னா ...
மலேசியத் திரை உலகில் பாஷினியின் வருகையால் புது டைம் லைன் தொடங்கியுள்ளது.
இனி கதாநாயகிகள் மத்தியில் மும்முனைப் போட்டி ஆரம்பம்!
0 Comments