டத்தோ ஹெத்தியின் AT மூவீஸ் தயாரிப்பில், லோகன் இயக்கத்தில், சரேஷ் - லதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'அழகிய தீ'. முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம், கடந்த 27-ஆம் தேதி மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது.
இப்படம் குறித்து அண்மையில் வீடியோ பதிவொன்றில் இப்படத்தின் தயாரிப்பாளர் டத்தோ ஹெத்தி தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது, இந்த நேரத்தில் 'அழகிய தீ' வந்திருக்கிறதே என்று டத்தோ ஹெத்தியிடம் ஒருவர் கேட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கணொளியை வெளியிட்டுள்ளார்.
எந்தப் படங்கள் வந்தால் என்ன? 'அழகிய தீ' நம்ம நாட்டுப் படம். முழுக்க முழுக்க எல்லாருமே மலேசியக் கலைஞர்கள்தான். நம்ம நாட்டு பொருளுக்கு நம்ம மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்களா?
இன்னொரு நாட்டு கதை, இன்னொரு நாட்டு படத்திற்கு இருக்கும் ஆதரவு, நம்ம நாட்டுப் படங்களுக்கு இல்லாதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. நம்ம கலைஞர்கள், நம்ம சினிமா, நம்ம வாழ்வியல் சொல்லும் கதை 'அழகிய தீ'. எனவே மக்கள் நம்ம நாட்டுப் படத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என டத்தோ ஹெத்தி தெரிவித்துள்ளார்!
0 Comments