கோலாலம்பூர் -ஜீலை -5
(வெற்றி விக்ட்ர்)
பேய் வேட்டை என்ற நிகழ்ச்சி லிங்கேஸ்வரனுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த நிகழ்ச்சி என்றாலும், பல கதாபாத்திரத்தில் நடித்த இந்த நாயனுக்கு, அமானுஷ்யம் என்ற ஒரு விசயம் எப்போதும் கைகொடுக்கிறது.
இவரின் 'பேய் வேட்டை' நிகழ்ச்சி இவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தாலும், கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் தற்போது அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி யில் வரும் 'கள்வனைக் கண்டுபிடி' தொடர் நாடகம், இவர் ஓர் அமானுஷ்ய நாயகன் என்பதை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
பேய் நாயகன் என்பது ஓர் அடையாளம் தான். காதல் கதை ஒரு புறம் இருக்க, மக்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது நம்பமுடியாத அமானுஷ்ய விசயங்களைத்தான்.
அந்த வகையில் கள்வனைக் கண்டுபிடி தொடர் மக்களை ஈர்த்துள்ளது. இது லிங்கேஸ்வரனின் கலைப் பயணத்தில் இன்னொரு அடையாளம்!
0 Comments