loader
விக்னேஷ் சிவனுக்கும் 'பை பை'யா? - நயன்தாரா காதலில் மீண்டும் சிக்கல்!

விக்னேஷ் சிவனுக்கும் 'பை பை'யா? - நயன்தாரா காதலில் மீண்டும் சிக்கல்!

தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகை நயன்தாரா விரைவில் குட்பை சொல்லக்கூடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவைக் காதலித்து வந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிம்புவிடம் இருந்து பிரபுதேவாவுக்கு மாறினார். பின்னர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விக்னேஷ் சிவன் கைக்கு மாறினார் நயன்தாரா. இப்பொழுது இங்கும் சிக்கல் விழுந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது
விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் கடந்த சில வருடங்களாக நன்றாக சென்றுகொண்டிருந்தது. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது திருமணம் எனும் வார்த்தையால் திரும்ப விரிசல் விழுந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஊர் சுற்றிவருவது விக்னேஷ் சிவன் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நயன்தாரா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கிறது!

0 Comments

leave a reply