கோவிட் 19 உலக பொருளாதாரத்தையே ஆட்டி வைத்திருக்கிறது. நம் நாடும் அதற்கு விதி விலக்கல்ல. இனி வரும் நாள்கள் கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று அண்மையில் பிரதமரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா அவர்கள் மருத்துவப் பயன்பாட்டிற்கான உதவிகளைச் செய்துள்ளார்.
அவ்வகையில், சுங்கை பூலோ மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளார் பேரரசியார்.
இது குறித்து கூறிய சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, “சுங்கை பூலோ மருத்துவமனைக்கு 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கிய பேரரசியார் அவர்களுக்கு சுகாதார அமைச்சு நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறது” என்றார். மேலும், நாட்டிற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு சுகாதார ஊழியர்களுக்கு ஒரு வலுவான உந்துதலை இது தந்துள்ளதாக அவர் கூறினார்.
இதே போல் ஜொகூர் முழுவதும் மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 42 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கிய ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரையும் நூர் ஹிஷாம் வாழ்த்தியுள்ளார்!
0 Comments