loader
கோவிட் நிவாரண நிதி  50 குடும்பங்களுக்கு சமையல் பொருட்களை வழங்கியது பத்துமலை நற்பணி மன்றம்!

கோவிட் நிவாரண நிதி 50 குடும்பங்களுக்கு சமையல் பொருட்களை வழங்கியது பத்துமலை நற்பணி மன்றம்!

(ஆர்.பார்த்திபன்)

கோலாலம்பூர், ஏப் 8-

பத்துமலை இந்தியர் நற்பணி மன்றம் ஏற்பாட்டில், கோவிட்-19 நிவாரண நிதியாக 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு 100 வெள்ளிக்கான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டினை அரசாங்கம் அறிவித்ததில் இருந்து பல வசதி குறைந்த குடும்பங்கள், வேலை இல்லாமல் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  அப்படிப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 50 குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவிருப்பதாகத் தெரிவித்த டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி அனைவரும் வீட்டிலேயே தங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்படி வலியுறுத்தினார்!

0 Comments

leave a reply

Recent News