சென்னை மார்ச்- 18
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் வலம் வருவதைக் குறைத்துக்கொண்ட நடிகை நமீதா, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சமூக வலைதளம் வாயிலாக மக்கள் தொடர்பை வைத்துள்ள அவரை, சமீபத்தில் ஒரு நபர் மிரட்டியுள்ளார்.
அந்த நபர் நமீதாவின் ஆபாசப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதைத் தொடர்ந்து, அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டார் நமீதா.
இன்ஸ்டாகிராமில் இந்த நபர் என்னை ஐட்டம் என செய்தி பதிவு செய்து, தகாத வார்த்தைகளில் அழைக்கிறார். அதனால், கோபமாக அவருக்குப் பதில் கொடுத்தேன்.
உடனே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என அந்த நபர் சமாளித்தார். பின் என் ஆபாசப் படத்தைப் பார்த்ததாகவும் அதனை வெளியிடப்போவதாகவும் மிரட்டினான். உண்மை என்ன என்பது எனக்குத் தெரியும். அதனால் முடிந்ததைச் செய் எனக் கூறினேன் என நமீதா பதிவிட்டுள்ளார்.
இதையெல்லாம் நான் ஏன் கவனிக்க வேண்டும்? மீடியா வெளிச்சம் இருப்பதாலா? அல்லது சினிமாவில் நடிகையாக இருக்கும் காரணத்தாலா? என் அமைதியை என்னுடைய பலவீனம் என எடுத்துக்கொள்ளாதே. இதுபோன்று பெண்களை மதிக்காதவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பெண்களை மதிப்பவர்களே உண்மையான மனிதர்கள் .பெண்களை மதிக்காதவர்கள் அவர்களது தாயை இகழ்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். மகளிர் தினம் கொண்டாடுவது பெரிதல்ல பெண்களை மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும் என நமீதா கூறியுள்ளார்!
0 Comments