திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடிவேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் தமிழக அரசியல் சூழல் குறித்தும், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் ரஜினி நேற்று பேசியது குறித்தும் வடிவேலுவிடம் விவரித்தனர்.
இதற்குப் பதிலளித்த வடிவேலு, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது, யாரும் உறுதியாகக் கூற முடியாது.
மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரின் முடிவை வரவேற்கிறேன். அவர் எடுத்த முடிவு சரிதான்.
என் திட்டப்படி 2021-ல் நான்தான் முதல்வர். கண்டிப்பாக இது நடக்கும் என்று நடிகர் வடிவேல் தனக்கே உரிய பாணியில் கிண்டலாகப் பேசினார்!
0 Comments