loader
யூடர்ன் அடி... வீட்டைப் பிடி!

யூடர்ன் அடி... வீட்டைப் பிடி!

கோலாலம்பூர் ஜனவரி-27

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த கிராமத்திற்கு, சுற்றுலாவிற்குச் சென்ற  மக்கள் இன்று சோகமாகவே வீடு திரும்பும் நாள். இன்றோடு விடுமுறை முடிந்து  நாளை வேலைக்குச் செல்லவேண்டிய  தொழிலாளிகள், மாணவர்கள், தினசரி குடும்பப் பொறுப்புக்குத் தயாராகும் குடும்ப தலைவிகள் அனைவருக்கும்  இன்று சற்றுத் தொய்வான நாளாக இருக்கும்.
கவலை வேண்டாம். மலாய்  மொழி பாணியில் தமிழ் லென்ஸ் வாசகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியான வார்த்தை
(esok masih ada).
ஆகையால், பரபரப்பான அன்றாட வாழ்க்கையைத் தொடங்க 'யூடன் அடி வீட்டைப் பிடி' என்ற உற்சாக மந்திரத்தோடு பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்.
வரும் வழியில் இயற்கையை ரசியுங்கள். சாலை ஓரக் கடைகளில் இளைப்பாறுங்கள். தூக்கம் வந்தால்  ஒய்வு எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடருங்கள். 
உல்லாசம் சென்ற பறவைகள் கூட்டில் அடையும் நேரம் சற்று நெருசலாக இருக்கும்.. சரியாகப் பயணத்தைத் தொடருங்கள்!

0 Comments

leave a reply

Recent News