கோத்தா திங்கி: இங்குள்ள கம்புங் மவாய் பாரு அருகே, பத்து 11-ல் உள்ள ஒரு ஜெட்டியில், சுங்கை மவாய் லாமா மீது தவறி விழுந்து 46 வயது நபர் மூழ்கினார்.
கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை தளபதி இப்ராஹிம் வாஹித் இதுகுறித்துக் கூறுகையில், திங்கள்கிழமை இரவு 8.47 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து திணைக்களத்திற்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனாலும், மீட்புக் குழு வருவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் மீட்டனர்.
முஸ்தபா அலி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மாவாய் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், காவல் நிலையத்திற்கு வந்த மருத்துவக் குழுவினரால் பாதிக்கப்பட்டவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது!
இதற்கிடையில், ஜொகூர் பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 குடும்பங்களைச் சேர்ந்த 729 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி, நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எஸ்.கே. தெலுக் ராமுனியா, கோலேஜ் வோகேஷனல் கோத்தா திங்கி, எஸ்.ஜே.கே.சி நியூ கோத்தாமற்றும் திவான் செரி தெரட்டாய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன!
0 Comments