(வெற்றி விக்டர்- காளிதாஸ்)
கோலகுபு பாரு டிசம்பர்-8
உலுசிலாங்கூர் நாடாளுமன்றத்தை மீட்டெடுக்க ம.இ.கா ஆயத்தம் ஆகியுள்ளது.
ம.இ.கா வசம் இருந்த உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தானிடம் பறிகொடுத்தது ம.இ.கா.
இம்முறை எப்படியாவது அத்தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ம.இ.கா தலைமைத்துவம் தீவீரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், இன்று கோலகுபு பாரு ம.இ.கா தொகுதி ஏற்பாட்டில் பொதுமக்கள் சந்திப்புடன் கூடிய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பின் வழி, உலு சிலாங்கூர் தொகுதியின் ம.இ.கா வேட்பாளர் யார் என்பது 80% சதவிகிதம் உறுதியானது.
ம.இ.கா-வின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி.மோகன், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று உலுசிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அதற்கு ஒரு விடையாய் அமைந்துள்ளது.
டத்தோ டி. மோகன் தலைமையில் நடந்த இந்த தீபாவளி உபசரிப்பில், அவர் இன்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
முன்னதாக, இன்று காலையில் அந்த வட்டாரத்தில் உள்ள கோயிலில் தரிசனம் பெற்று, தனது மக்கள் சந்திப்பைத் தொடங்கினார்.
ஒரு பெரிய சுனாமிக்குப் பிறகு, உலு சிலாங்கூரில் ம.இ.கா மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதையே இது காட்டுகிறது.
அதோடு மட்டும் அல்லாமல், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி, மாபெரும் கூட்டத்தை உலு சிலாங்கூர் தொகுதியில் ம.இ.கா ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது!
0 Comments