loader
பத்துமலை ஐயப்பன் ஆலயத்தில் 1008  கலச பூஜை!

பத்துமலை ஐயப்பன் ஆலயத்தில் 1008  கலச பூஜை!

பத்துகேவ்ஸ் நவம்பர்- 21

கார்த்திகை முதல் நாளன்று சபரிமலை ஐயப்பன் சுவாமியை வேண்டி பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதத்தில் இருந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.

கேரளாவில் உள்ள சபரிமலை திருக்கோயிலில் இந்த நேர்த்திக்கடன் பூஜை விசேஷமாக இருக்கும். தற்போது அதே போல் மலேசியாவிலும் பத்துமலை ஐயப்பன் தேவஸ்தானம்  அத்தகைய நேர்த்திக்கடனுக்கு புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக விளங்குகின்றது.

கேரளாவிற்குச் சென்று தங்கள் நேர்த்திகடன் செலுத்த முடியாதவர்கள், பத்துமலை ஐயப்பன்  திருக்கோயிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றலாம் என்கிறார், பத்துமலை ஐயப்பன் சுவாமி தேவஸ்தான தலைவர் யுவராஜா.

அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திகடனுக்காக வேண்டி மாலை அணிந்துகொண்டதாக அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து, இங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு ஐயப்பன் தரிசனம் பெறவிருப்பதாக யுவராஜா தெரிவித்தார்.

சபரிமலையில் மிகவும் பிரசித்திபெற்ற பூஜையான  ‘1008 கலச பூஜை’, பத்துமலை ஐயப்பன் சன்னதியிலும்  டிசம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சபரிமலை மேல்சாந்தி தலைமையில் நடைபெறவிருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த பூஜையில் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு  ஐயனின் ஆசி பெற அழைக்கப்படுகின்றனர்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதோடு, அவர்களுடன் ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, பேரின்பம் மலேசியாவின் ஆலோசகர்  தாமோதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News